Saturday, October 22, 2011

இன்று நமது சிந்தனைக்கு

ஆத்மாவைக் காண்பதற்கு அவர்களுக்கு ஏதுவாக மனிதர்களுக்கு புத்திசாலித்தனம்
மற்றும் மிக உயர்ந்த அளவிலான பகுத்தறியும் அறிவு ஆகியவை
அளிக்கப்பட்டிருக்கின்றன. அதன் காரணத்தாலேயே மனிதர்கள் படைப்பின் தலைமை
என அழைக்கப்படுகிறார்கள். அதனாலேயே வேத நூல்கள் மனிதர்களாய்ப் பிறக்கும்
வாய்ப்பு மிகவும் அதிர்ஷ்டமான ஒரு அரிதான வாய்ப்பு என்று அறிவிக்கின்றன.
மனிதர்கள் படைப்பின் காரணத்தை தேடி அறியும் சக்தி, தகுதிகள் மட்டும்
உந்துதல் ஆகியவற்றைப் பெற்றிருக்கிறார்கள். மக்கள் அமைதி, வளம் மற்றும்
பாதுகாப்பு ஆகியவற்றை முன்னேறச் செய்ய பாடுபட வேண்டும். அவர்கள்
இயற்கையில் உள்ள பொருட்கள் மற்றும் சக்திகளைப் பயன்படுத்தி சந்தோசம்
மற்றும் இன்பத்தை முன்னேறச் செய்ய வேண்டும். அவை யாவும் வேதங்களால்
அனுமதிக்கப்படுகின்றன

No comments:

Post a Comment