Saturday, November 13, 2010

இன்று நமது சிந்தனைக்கு

மற்ற எல்லா குணங்களையும் விட உங்களிடமே நீங்கள் தன்னம்பிக்கை கொண்டிருப்பது உங்கள் ஒவ்வொருவருக்கும் முக்கியம். தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பதே ஒருவரது வீழ்ச்சியின் ஆரம்பம். இன்றைய உலகம் அழிவையும் வீழ்ச்சியையும் எதிர் நோக்குவதற்குக் காரணம் மக்கள் தங்கள் மீதுள்ள நம்பிக்கையை இழந்துவிட்டதுதான். தன்னம்பிக்கை மட்டுமே ஒவ்வொரு மனிதருக்கும் அமைதியையும் செழிப்பையும் வழங்கும் சக்தி கொண்டிருக்கிறது. நீங்கள் தன்னம்பிக்கை கொண்டிருந்தீர்கள் என்றால், எல்லா இடங்களிலும் உங்களுக்கு கருணை கிட்டும். உங்கள் மீது எல்லா இடங்களிலும் மரியாதை கொள்வர். நீங்கள் எதைத் தொட்டாலும் அது பொன்னாய் மாறும்!--

No comments:

Post a Comment